கணவன், மகளை 2 நாளாக தவிக்கவிட்டு எஸ்.ஐ.யுடன் விமானத்தில் ஊர் சுற்றிய பெண் போலீஸ்: அதிகாரிகள் எச்சரித்ததால் வீடு திரும்பினார்

சென்னை: தண்டையார்பேட்டை காவலர் குடியிருப்பை சேர்ந்தவர் ரெஜினி (37). வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார்.  இவரது மனைவி கொருக்குப்பேட்டை காவல் நிலையத்தில் பெண் காவலராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும், அதே காவல் நிலையத்தில் கடந்த 6 மாதத்துக்கு முன்பு பணிபுரிந்த மணலியை சேர்ந்த எஸ்ஐக்கும்  பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்கள் பல இடங்களில் உல்லாசமாக சுற்றி திரிந்தனர். இந்த எஸ்ஐக்கு ஏற்கனவே திருமணமாகி, மனைவி, குழந்தைகள் உள்ளனர்.    இந்நிலையில், வெளிநாட்டிலிருந்து சென்னை வந்த ரெஜினி, தனது மனைவி எஸ்ஐயுடன் சுற்றித்திரிவதை அறிந்து அவரை கண்டித்துள்ளார். ஆனாலும், அவர்களின் தொடர்பு நீடித்தது. இதனால் ஆத்திரமடைந்த ரெஜினி இதுகுறித்து உயர் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார். அதன்பேரில் ஆர்.கே.நகர் காவல் நிலையத்திற்கு எஸ்ஐ மாற்றப்பட்டார்.  இந்நிலையில்,  கடந்த வாரம் கணவன் ரெஜினி மற்றும் குழந்தையை விட்டுவிட்டு ெபண் காவலர், எஸ்ஐயுடன் திடீரென மாயமானார். அவரை தேடி ரெஜினி 2 நாட்களாக குழந்தையுடன் தவித்தார். இதுகுறித்து ரெஜினி வண்ணாரப்பேட்டை உதவி ஆணையரிடம் புகார் தெரிவித்தார்.

விசாரணையில், அந்த பெண் காவலர், கணவன் மற்றும் குழந்தையை தவிக்கவிட்டு, எஸ்ஐயுடன் விமானத்தில் ஊர் சுற்றியது தெரியவந்தது. அவர்களை கண்டித்ததை தொடர்ந்து, கடந்த 2 நாட்களுக்கு முன்பு இருவரும் வீட்டிற்கு திரும்பினர். பெண் காவலரின் கணவர் வெளிநாட்டில் வேலை செய்வதால், குழந்தையுடன் தனியாக வசித்து வருகிறார். இதை பயன்படுத்தி, எஸ்ஐ அடிக்கடி அவரது வீட்டிற்கு சென்று தேவையான உதவிகளை செய்துள்ளார். மேலும், அவரது 5 வயது குழந்தையை எஸ்ஐ அடிக்கடி வெளியே அழைத்து சென்றார். இதனால், அவர்களுக்குள் நெருக்கம் ஏற்பட்டது தெரியவந்தது.     இவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுப்பது என்று அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.  இந்த விவகாரம் போலீசாரிடையை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: