சென்னை: தண்டையார்பேட்டை காவலர் குடியிருப்பை சேர்ந்தவர் ரெஜினி (37). வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி கொருக்குப்பேட்டை காவல் நிலையத்தில் பெண் காவலராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும், அதே காவல் நிலையத்தில் கடந்த 6 மாதத்துக்கு முன்பு பணிபுரிந்த மணலியை சேர்ந்த எஸ்ஐக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்கள் பல இடங்களில் உல்லாசமாக சுற்றி திரிந்தனர். இந்த எஸ்ஐக்கு ஏற்கனவே திருமணமாகி, மனைவி, குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், வெளிநாட்டிலிருந்து சென்னை வந்த ரெஜினி, தனது மனைவி எஸ்ஐயுடன் சுற்றித்திரிவதை அறிந்து அவரை கண்டித்துள்ளார். ஆனாலும், அவர்களின் தொடர்பு நீடித்தது. இதனால் ஆத்திரமடைந்த ரெஜினி இதுகுறித்து உயர் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார். அதன்பேரில் ஆர்.கே.நகர் காவல் நிலையத்திற்கு எஸ்ஐ மாற்றப்பட்டார். இந்நிலையில், கடந்த வாரம் கணவன் ரெஜினி மற்றும் குழந்தையை விட்டுவிட்டு ெபண் காவலர், எஸ்ஐயுடன் திடீரென மாயமானார். அவரை தேடி ரெஜினி 2 நாட்களாக குழந்தையுடன் தவித்தார். இதுகுறித்து ரெஜினி வண்ணாரப்பேட்டை உதவி ஆணையரிடம் புகார் தெரிவித்தார்.