சரோஜாதேவி, சவுகார் ஜானகி, ராமராஜன் மற்றும் சிவகார்த்திகேயன், யோகி பாபு, சங்கீதா, ஐஸ்வர்யா ராஜேஷுக்கு கலைமாமணி விருது: முதல்வர் எடப்பாடி இன்று வழங்குகிறார்

சென்னை:  தமிழக அரசு சார்பில் 2019 மற்றும் 2020ம் ஆண்டுக்கான கலைமாமணி விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டது. கலைமாமணி விருது மற்றும் பொற்கிழி வழங்கும் விழா சென்னை தலைமை செயலகத்தில் இன்று மாலை நடைபெறுகிறது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி விருதுகள் வழங்கி பேசுகிறார். நடிகர்கள் ராமராஜன், சிவகார்த்திகேயன், யோகி பாபு, நடிகைகள் சரோஜாதேவி, சவுகார் ஜானகி, சங்கீதா கிரிஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், தேவதர்ஷினி, மதுமிதா, இசை அமைப்பாளர்கள் டி.இமான், தினா,  பாடகர்கள் சுஜாதா, அனந்து, தயாரிப்பாளர்கள்  கலைப்புலி எஸ்.தாணு, ஐசரி கணேஷ், இயக்குனர்கள் கவுதம் வாசுதேவ் மேனன், லியாகத் அலிகான், மனோஜ் குமார், ரவிமரியா, டி.வி நடிகர் நந்தகுமார்,

நடிகைகள் சாந்தி வில்லியம்ஸ், நித்யா, ஸ்டண்ட் இயக்குனர்கள் ஜாகுவார் தங்கம், தளபதி தினேஷ், நடன இயக்குனர்கள் சிவசங்கர், ஸ்ரீதர், எடிட்டர் ஆண்டனி, மெல்லிசை கலைஞர் கோமகன், பாடலாசிரியர்கள் காமகோடியன், காதல்மதி, வசனகர்த்தா வி.பிரபாகர், ஒளிப்பதிவாளர் ஆர்.ரகுநாத ரெட்டி, கதாசிரியர் தாமரை செந்தூர்பாண்டி ஆகியோருக்கு கலைமாமணி விருது வழங்கப்படுகிறது. நடிகைகள் சரோஜாதேவி, சவுகார் ஜானகி, பின்னணி பாடகிகள் பி.சுசீலா, ஜமுனா ராணி ஆகியோருக்கு ஜெயலலிதா சிறப்பு கலைமாமணி விருது வழங்கப்படுகிறது. சுகி சிவம், பாடகி வாணி ஜெயராம் ஆகியோருக்கும் விருது வழங்கப்படுகிறது. வறுமையில் வாடும் மூத்த கலைமாமணி விருதாளர்கள் பிரிவில் நடிகை பசி சத்யா, நாடக நடிகை எஸ்.என்.பார்வதி உள்பட சிலருக்கு பொற்கிழி வழங்கப்படுகிறது.

Related Stories: