சென்னை: பதிவுத்துறை ஐஜி சங்கர் அனைத்து சார்பதிவாளர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:
* மனைப்பிரிவு அங்கீகாரம் கோரும் மனுதாரர்களுக்கு (சொத்தின் உரிமையாளர்கள்) நகர ஊரமைப்புத்துறையால் அரசுக்கு சாலை மற்றும் திறந்த வெளி இடஒதுக்கீடு ஆகியவற்றிற்காக தானமாக வழங்கப்படும் நிலம் குறித்த வரைபடத்துடன் தான ஆவணம் பதிவு செய்திட கோரும் அறிவுரை கடிதம் வழங்கப்படும். மனுதாரர்களால் (சொத்தின் உரிமையார்கள்) மேற்குறிப்பிட்ட வரைபடம் மற்றும் அறிவுரை கடிதத்துடன் அரசுக்கு சாலை மற்றும் திறந்தவெளி இடம் ஒதுக்கீடு ஆகியவற்றிற்காக தானம் ஆவணம் எழுதப்பட்டு மனுதாரர்கள் மட்டும் கையொப்பம் செய்து, பதிவுக்கு தாக்கல் செய்யப்படும் நிகழ்வுகளில் அவ்வாவணப்படி தானம் வழங்கப்படும். உள்ளாட்சி அமைப்புகளின் சார்பாக அதன் தலைவர்/ஆணையர் ஆகியோரின் கையொப்பம் ஆவணத்தில் இடம் பெற வேண்டும் என மனுதாரர்களை வலியுறுத்தக்கூடாது.