சென்னை: கோரிக்கைகளுக்காக உண்ணாவிரதம் இருப்பது தற்கொலை முயற்சி ஆகாது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவில் கூறியுள்ளது. பூந்தமல்லியில் உள்ள சிறப்பு முகாமில் அடைக்கபட்டுள்ளவர் சந்திரகுமார். இலங்கை தமிழரான இவர் கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 2013ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி முதல் 24ம் தேதி வரை முகாமில் உண்ணாவிரதம் இருந்தார். இதையடுத்து சந்திரகுமார் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக அவர் மீது பூந்தமல்லி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் 2016ல் கீழமை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில்தன் மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்ய கோரி சந்திரகுமார் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.