பள்ளிப்பட்டு: பள்ளிப்பட்டு அருகே டாஸ்மாக் கடையை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, அங்கு பணம் இல்லாததால், மதுபாட்டில்களை மர்ம ஆசாமிகள் அள்ளி சென்றுள்ளனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பள்ளிப்பட்டு அருகே பொதட்டூர்பேட்டை - காவேரிராஜபேட்டை சாலையில் அமைந்துள்ள லுங்கி பாவு மில்லில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த வேனை மர்ம கும்பல் நேற்று முன் தினம் இரவு திருடியுள்ளனர். பின்னர், அருகில் இருந்த 2 டாஸ்மாக் கடைகளின் பூட்டை உடைத்து பீரோவை திறந்து பார்த்தனர். அப்போது, அதில் பணம் இல்லாததால், மதுக்கடையில் ஆர அமர்ந்து மது அருந்தி விட்டு கூடவே பீர், பிராந்தி பாட்டில்கள் அள்ளிச் சென்றுள்ளனர். போதை அதிகரித்ததில் சொரக்காய்ப்பேட்டை ஏரிக்கரை பகுதியில் சென்றபோது வேன் மின் கம்பம் மீது மோதி குப்புற கவிழ்ந்தது.