மும்பை: விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக டிவிட்டரில் கருத்து தெரிவித்த ஸ்வீடன் நாட்டு சுற்றுச்சுழல் ஆர்வலர் கிரெட்டா தன்பர்க் சர்ச்சைக்குரிய ‘டூல்கிட்’ ஒன்றை பகிர்ந்தார். இதில் போராட்டத்தில் பங்கேற்பவர்கள் செய்ய வேண்டிய விஷயங்கள் இடம் பெற்றிருந்தன. இந்த டூல்கிட் மூலம் சர்வதேச அரங்கில் இந்தியாவின் பெயரை கெடுக்க சதி நடந்திருப்பதாக டெல்லி போலீசார் குற்றம்சாட்டினர். மேலும் காலிஸ்தான் பிரிவினைவாதிகளின் சதிதிட்டத்திற்கு உதவியதாக பெங்களூரு சுற்றுச்சூழல் ஆர்வலரான 21 வயது இளம்பெண் திஷா ரவி தேச துரோக வழக்கில் கைதானார்.