புதுடெல்லி :கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசிகளை தொடர்ந்து மேலும் 18க்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் தயாரிக்கும் பணி நடைபெற்று வருவதாக மத்திய சுகாதார அமைச்சர் தெரிவித்தார். நாடு முழுவதும் கடந்த மாதம் 16ம் தேதி முதல் கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி போடப்பட்டு வருகின்றது. கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு ஆகிய 2 தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. முதற்கட்டமாக சுகாதார பணியாளர்கள் மற்றும் முன்களப் பணியாளர்கள் என சுமார் 3 கோடி பேருக்கு தடுப்பூசி போடும் பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் கூறுகையில், ‘இந்தியாவில் கொரோனா தொற்று குறைந்து வருகிறது. நாடு முழுவதும் கடந்த 7 நாட்களில் 188 மாவட்டங்களில் புதிய பாதிப்புகள் இல்லை. அதேநேரம் 21 மாவட்டங்களில் கடந்த 21 நாட்களில் புதிய பாதிப்புகள் எதுவும் இல்லை.