தென்காசி: தென்காசி மாவட்டம் கரும்புலியூத்து பகுதியில் பேருந்து நிற்காததை கண்டித்து முதியவர் ஒருவர் பேருந்தின் முன்புறம் நின்றவாறே பயணம் செய்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது. திருநெல்வேலி நோக்கி சென்றுகொண்டிருந்த பேருந்து ஆலங்குளம் அடுத்த கரும்புலியூத்து பகுதியில் நிற்காமல் சென்றுள்ளது.