மதுராந்தகம் அருகே தனியார் கல்குவாரிக்கு எதிர்ப்பு.: சக்தி வாய்ந்த வெடிகளை வைப்பதால் வீடுகளில் விரிசல் என புகார்

மதுராந்தகம்: மதுராந்தகம் அருகே தனியார் கல்குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம் சிறுநல்லூர் கிராமத்தில் சுமார் 180 ஏக்கரில் கல்குவாரி நடத்த தனியார் நிறுவனம் அனுமதி பெற்றுள்ளது. இந்த குவாரியில் விதிகளுக்கு புறம்பாக 500 அடி ஆழத்தில் கருங்கற்களை வெடி எடுப்பதாக கிராமமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

மேலும் அதிக சக்தி வாய்ந்த வெடிபொருட்களை கொண்டு கருங்கற்களை வெட்டி எடுப்பதால் வீடுகளில் விரிசல் விடுவதாகவும் அவர் தெரிவித்துள்ளனர். அதனைத்தொடர்ந்து 500 அடிக்கு கீழ் வெடிபொருட்கள் வெடிப்பதால் சுற்றுவட்டார பகுதிகளில் நிலத்தடி நீர் முழுமையாக வறண்டு விட்டதாக அவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். இதனால் தனியார் கல்குவாரியை உடனடியாக மூட கோரி 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: