மார்ச் 1ம் தேதி வரை சென்னையில் போராட்டம் பொதுக்கூட்டத்துக்கு தடை

சென்னை: சென்னை மாநகர காவல் எல்லையில் வரும் மார்ச் 1ம் தேதி வரை பேரணி, ஆர்ப்பாட்டம், பொதுக்கூட்டங்கள் நடத்த தடை விதித்து மாநகர போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை மாநகர காவல் எல்லையில் சிட்டி போலீஸ் ஆக்ட் 41ன் படி உண்ணாவிரதம், பேரணி, மனிதசங்கலி, போராட்டங்கள், பொதுக் கூட்டங்கள் நடத்த நேற்று நள்ளிரவு முதல் வரும் மார்ச் 1ம் தேதி வரை அதாவது 15 நாட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. போலீசாரின் தடை உத்தரவை மீறி யாரேனும் போராட்டங்கள்  மற்றும் பொதுக்கூட்டங்கள் நடத்தினால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: