மதுரை: மதுவிலக்கை அமல்படுத்தினால் குற்றங்கள் குறையும், தனிநபர் வருவாய் உயரும் என உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. பள்ளிகள், குடியிருப்பு பகுதிகள் அருகே டாஸ்மார்க் வைப்பதற்கு அது ஒன்றும் புத்தகக் கடை கிடையாது என நீதிபதிகள் கூறியுள்ளனர். மதுவிற்பனை மூலம் வருவாய் அதிகரித்துக் கொண்டே இருப்பதால் மாநிலமே மதுவில் மூழ்கியுள்ளது என நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர்.