திருவில்லிபுத்தூர்: திருவில்லிபுத்தூர் அருகே தோட்டத்துக்குள் புகுந்து மக்காளச்சோள பயிர்களை காட்டுப்பன்றிகள் நாசப்படுத்தியதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். திருவில்லிபுத்தூர் அருகே உள்ள செவலஊரணி, செண்பகத்தோப்பு பகுதிகளில் மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்களை விவசாயிகள் பயிரிட்டுள்ளனர். பல ஏக்கரில் பயிரிட்டிருந்த மக்காச்சோளப் பயிர்கள் தற்போது அறுவடைக்கு தயாராக உள்ளது. இந்நிலையில் காட்டுப்பன்றிகள் கூட்டம், கூட்டமாக விவசாய நிலத்தில் புகுந்து மக்காச்சோளத்தை சேதப்படுத்தியுள்ளன. இதனால் விவசாயிகள் மிகுந்த கவலையடைந்துள்ளனர்.