26 வேப்பம்பட்டு ஊராட்சி தலைவர் மகன் திருமண வரவேற்பு விழா: இன்று மாலை நடக்கிறது

திருவள்ளூர்: திருவள்ளூர் ஒன்றியம், 26 வேப்பம்பட்டு ஊராட்சி மன்ற தலைவரும், திருவள்ளூர் மாவட்டம் ஊராட்சி மன்றத் தலைவர்களின் கூட்டமைப்பின் செயலாளரும், தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவரும், மாவட்ட திட்ட குழு உறுப்பினருமான சதா.பாஸ்கரன் - பிரபாவதி பாஸ்கரன் ஆகியோரது மகன் வழக்கறிஞர் பா.வெங்கடேசன் என்கிற பாஸ்.முருகன் என்பவருக்கும், வயலாநல்லூர் அ.சங்கர், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வள்ளி சங்கர் ஆகியோரது மகள் எஸ்.வித்யா என்பவருக்கும் நாளை 15ம் தேதி திங்கள்கிழமை காலை 6 மணிக்கு மேல் 7.30 மணிக்குள்ளாக 26, வேப்பம்பட்டு ஸ்ரீஎல்லை அம்மன் திருக்கோயில் வளாகத்தில் திருமணம் நடக்கிறது.

முன்னதாக இன்று மாலை 6 மணி அளவில் திருமண வரவேற்பு விழா நடக்கிறது. இந்த விழாவிற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி செயல் தலைவர் டாக்டர் கே.ஜெயக்குமார் எம்பி தலைமை தாங்குகிறார்.

திருவள்ளூர் மாவட்ட தலைவர்கள் திருவேற்காடு லயன் டி.ரமேஷ், ஏ.ஜி.சிதம்பரம் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, விளவங்கோடு எம்எல்ஏ விஜயதாரணி, திருவள்ளூர் மத்திய மாவட்ட திமுக செயலாளர் ஆவடி சா.மு.நாசர், பூந்தமல்லி எம்எல்ஏ ஆ.கிருஷ்ணசாமி மற்றும் அரசியல் கட்சிகளின் முன்னணித் தலைவர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்துகின்றனர். திருமணத்திற்கு வருகை தருபவர்கள் திமுக மாவட்ட பிரதிநிதி எஸ்.ஜெயபாலன், ஒன்றிய குழு பெருந்தலைவர் ஜெ.ஜெயசீலி ஜெயபாலன், அதிமுக மாவட்ட பிரதிநிதி எஸ்.ருதுபாலன், ஊராட்சி செயலாளர் அமுதா ருதுபாலன் ஆகியோர் வரவேற்கின்றனர்.

Related Stories: