பைக் மீது சரக்கு லாரி மோதி 2 வாலிபர்கள் பலி

திருவள்ளூர்: திருவள்ளூர் அரசு தலைமை தபால் நிலையம் அருகே திருவள்ளூர் புங்கத்தூர் பகுதியை சேர்ந்தவர் ஜெயபால். இவரது மகன் சின்னராசு (எ) செல்வராஜ் (24). பத்தியால்பேட்டையை சேர்ந்தவர் ஏழுமலை. இவரது மகன் அஜித் (24 ). இருவரும் நண்பர்கள். இவர்கள் நேற்று மாலைபெரிய குப்பம் பகுதியில் டைல்ஸ் ஒட்டும்  வேலையை முடித்து விட்டு வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.   அப்போது திருவள்ளூர் முக்கிய சாலையில் முந்திச் செல்ல முயன்ற மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த சரக்கு லாரி  இருசக்கர வாகனம் மீது மோதியதில் சுமார் நூறு மீட்டர் அளவிற்கு இழுத்துச் செல்லப்பட்ட இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

 இது குறித்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த  திருவள்ளூர் நகர போலீஸார் சரக்கு லாரியை மடக்கி பிடித்தனர் பின்னர்  இருவரின் சடலத்தையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தின் காரணமாக அப்பகுதியில் சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Related Stories: