கிராம உதவியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு: கலெக்டர் தகவல்

திருவள்ளூர்: கலெக்டர் பொன்னையா வௌியிட்ட அறிக்கை:  திருவள்ளூர் மாவட்டத்தில் திருவள்ளூர் - 20, ஊத்துக்கோட்டை - 28, ஆவடி - 6, பூந்தமல்லி - 17, திருத்தணி - 14, பள்ளிப்பட்டு - 1, ஆர்.கே.பேட்டை - 5, பொன்னேரி - 27, கும்மிடிப்பூண்டி - 27 என மொத்தம் - 145 கிராம உதவியாளர் பணியிடம் காலியாக உள்ளது. இப்பணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் நேரடி விண்ணப்பங்கள் மூலம் நியமனம் செய்ய தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. குறைந்தபட்ச கல்வி தகுதி 5ம் வகுப்பு தேர்ச்சி, விண்ணப்பதாரர் சமீபத்திய புகைப்படத்துடன் விண்ணப்ப மனுவினை பூர்த்தி செய்து, உரிய சான்றிதழ் நகல்களுடன் சம்பந்தப்பட்ட வட்டாட்சியர் அலுவலகத்தில் தபால் மற்றும் நேரடியாக வரும் 17ம் தேதிக்குள் விண்ணப்பிக்காம்.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: