மொபட் - ஷேர் ஆட்டோ மோதல் உணவு சப்ளையர் பலி

ஆவடி: அம்பத்தூர் அடுத்த கள்ளிகுப்பம் கங்கைநகரை சேர்ந்தவர் சுனில்குமார்(29). சினிமா துறையில் உள்ளவர்களுக்கு உணவு சப்ளை செய்து வந்தார். நேற்று முன்தினம் வேலை முடிந்து மொபட்டில் வீட்டுக்கு புறப்பட்டார். பட்டாபிராம் அண்ணா நகர் பகுதியில் வந்தபோது அந்த வழியாக வந்த ஷேர் ஆட்டோ, மொபட் மீது மோதியது.  இதில் அவர் மொபட்டுடன் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஆவடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். பரிசோதனை செய்த டாக்டர்கள் சுனில்குமார் வரும் வழியிலேயே  இறந்துவிட்டதாக தெரிவித்தனர். புகாரின்பேரில் பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு போலீசார் திருநின்றவூர்  பாக்கம் கிராமத்தை சேர்ந்த சுதர்சனராஜா(26) என்ற ஆட்டோ டிரைவரை கைது செய்தனர்.

Related Stories: