சென்னை: தமிழக அரசு வெளியிட்ட அறிக்கை: சட்டமன்றத்தில் தமிழக முதல்வர் கடந்த பிப்.5ம் தேதி 12,110 கோடி ரூபாய் பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்தார். இதன்மூலம் 16.43 லட்சம் விவசாயிகள் பயன்பெறுவர். 2021 ஜனவரி 31ம் தேதி வரை பெறப்பட்ட அனைத்து பயிர்க்கடன்களும் ரத்து செய்யப்படுகிறது. மேற்கண்ட தினத்தில் பயிர்க்கடன்களுக்கான அசல், வட்டி, அபராத வட்டி மற்றும் இதர செலவினங்கள் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும். அதில் வேளாண்மை நகைக் கடனும் தள்ளுபடி செய்யப்படும். குற்ற நடவடிக்கை, சட்ட விசாரணை, விதிமுறைகேடு உள்ள கடன்களுக்கு இது பொருந்தாது.போலி ஆவணம் அடிப்படையில் வழங்கப்பட்ட கடன்கள், பினாமி கடன்கள் ரத்து செய்யப்படாது. பயிர் செய்ய வாங்கிய நகைக் கடன் மட்டும் தள்ளுபடி செய்யப்படும். வேளாண்மை சாரத நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படாது. தகுதியுள்ள பயிர்களுக்கான கடன், அசல், வட்டி விவசாயிகளிடம் இருந்து வசூலிக்க கூடாது.