சென்னை: தமிழ்நாடு கூட்டுறவு நியாயவிலை கடை ஊழியர்களின் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு நிர்வாகிகளின் அவசர கூட்டம் கடந்த வாரம் சென்னையில் நடந்தது. இந்த கூட்டத்தில் தொமுச, சிஐடியு, தமிழ்நாடு அரசு கூட்டுறவு நியாயவிலை கடை பணியாளர் சங்கம், ஏஐடியுசி, ஐஎன்டியுசி, டிடியுசி, அம்பேத்கர் சங்கம், ஜெஎம்எஸ், போக்குவத்து மற்றும் பொது தொழிலாளர்கள் சங்கம், எரிவாயு பணியாளா–்கள் சங்கம் ஆகிய தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்து கொணடனர்.இந்த கூட்டத்தில், ரேஷன் கடை ஊழியர்களின் கோரிக்கையை அரசு நிறைவேற்றும் வரை 12ம் தேதி (நேற்று) சென்னை, கீழ்ப்பாக்கத்தில் உள்ள மாநில கூட்டுறவு பதிவாளர் அலுவலகத்தில் காலை 10 மணியில் இருந்து ஊதிய உயர்வு அறிவிப்பை தமிழக அரசு வெளியிடும் வரை காலவரையற்ற போராட்டம் நடத்துவது என ஒருமனதாக தீர்மானிக்கப்பட்டது.