கூட்டணி பற்றி இனி தேமுதிக-விடம் கேட்காதீர்கள்; அதிமுக-விடம் கேளுங்கள்: பிரேமலதா பேட்டி

சென்னை: கூட்டணி பற்றி இனி தேமுதிக-விடம் கேட்காதீர்கள்; அதிமுக-விடம் கேளுங்கள் என பிரேமலதா தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், கூட்டணியில் எந்த குழப்பமோ, பிரச்சனையோ இல்லை. கூட்டணி குறித்து தலைமை தாங்கும் அதிமுகவை தான் கேட்கவேண்டும். தேமுதிக பொதுக்குழு -  செயற்குழு கூட்டத்தில் கூட்டணி குறித்து நல்ல அறிவிப்பு வரும். தேர்தல் பிரசாரத்தில் விஜயகாந்த் நிச்சயம் பங்கேற்பார். தனித்து போட்டியிட்டால் 234 தொகுதிகளிலும் தேமுதிக வெற்றி பெறும் என பிரேமலதா தெரிவித்தார்.

Related Stories: