சென்னை: ஆதார் பதிவு மற்றும் திருத்தங்களை மேற்கொள்ள நாளை அஞ்சலகங்களில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இதுகுறித்து, சென்னை மத்திய முதுநிலை கோட்ட கண்காணிப்பாளர் நேற்று வெளியிட்ட அறிக்கை:இந்திய அஞ்சல் துறையின் ஆதார் பதிவு மற்றும் திருத்தம் செய்வதற்கான சிறப்பு முகாம் வரும் 13ம் தேதி (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. புதியதாக ஆதார் பதிவு, முகவரி, புகைப்படம், பெயர், பாலினம், பிறந்த தேதி, கைபேசி எண், மின்னஞ்சல் திருத்தம், 5 மற்றும் 15வது வயதில் பயோமெட்ரிக் புதுப்பித்தல் ஆகிய சேவைகள் தபால் நிலையங்களில் மேற்கொள்ளப்பட உள்ளன.