பிரபல ஹரியான்வி பாடகிக்கு எதிராக போலீசார் வழக்கு பதிவு

புதுடெல்லி: ஹரியான்வி பாடகரும் நடனக் கலைஞருமான சப்னா சவுத்ரி உள்ளிட்ட சிலருக்கு எதிராக, மோசடி மற்றும் நம்பிக்கையை மீறிய குற்றச்சாட்டில் டெல்லி பொருளாதாரக்குற்றப் பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.  டெல்லியை சேர்ந்த பிஅண்ட்எம் மூவிஸ் பிரைவேட் லிமிடெட் என்கிற நிறுவனத்தின் இயக்குநர் பவன் சாவ்லா, பிரபலங்களை வைத்து விளம்பரங்களில் ஈடுபடுத்துவது உள்ளிட்ட செலிபிரிட்டி மேலாண்மை தொழிலை செய்து வந்தார். இவர், பிரபல ஹரியான்வி பாடகரான சப்னா சவுத்ரி உடனும் தொழில்முறை ஒப்பந்தம் செய்து இருந்தார்.

ஆனால், சவுத்ரி, தங்களிடம் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் விதிமுறைகளை மீறிவிட்டார். எங்கள் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துகொண்ட பிறகு, வேறு எந்த நிறுவனத்துடனும் பணியாற்ற மாட்டார் அல்லது வேறு எந்த நிறுவனத்திலும் சேர மாட்டார், அல்லது எந்தவொரு வாடிக்கையாளருடனும் நேரடி அல்லது மறைமுக தொடர்பு இல்லை என உறுதியளித்த ஒப்பந்தம் செய்துகொண்டார். ஆனால், அந்த உறுதிமொழி மற்றும் விதிகளை சப்னா மீறிவிட்டார். எனவே, அவர் மீது நடவடிககை மேற்கொள்ள வேண்டும் என்று போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதைடுத்து, சப்னா மற்றும் அவருடச் சேர்ந்த சிலருக்கு  எதிராக பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.

Related Stories: