சென்னை : ’’அண்ணன் சூர்யா வீடு திரும்பியிருக்கிறார்’’ என்று நடிகர் சூர்யா கொரோனாவிலிருந்து மீண்டு இன்று வீடு திரும்பியதை அவரது தம்பி கார்த்தி ட்விட்டரில் தெரிவித்து இருக்கிறார். தமிழ் திரைப்பட உலகில் முன்னணி நாயகரான சூர்யா சமீபத்தில் கொரோனா காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளியான செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதை தொடர்ந்து அவர் உடல் நலம் பெற பலர் பதிவிட்டு வந்தனர்.சூர்யா கொரோனவில் இருந்து குணமடைந்து மீண்டும் சிங்கம் போல் திரையில் தோன்ற மானாமதுரை சூர்யா நற்பணி இயக்கம் சார்பாக மானாமதுரையில் அமைந்துள்ள ஶ்ரீ வழி விடுமுருகன் ஆலயத்தில் சிறப்பு பிராத்தனை செய்தனர். திருவள்ளூர் தெற்கு மாவட்டம், ஆவடியில் அமைந்துள்ள கடும்பாடி சின்னமன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடை பெற்றது.