டெல்லி: தமிழகத்தில் மாநில எஸ்.சி ஆணையம் அமைக்காதது குறித்து விவாதிக்க மக்களவையில் ரவிக்குமார் எம்.பி. நோட்டீஸ் வழங்கியுள்ளார். சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் மாநில எஸ்.சி ஆணையத்தை தமிழக அரசு அமைக்கவில்லை. ஆணையம் அமைக்கப்படாததால் பட்டியலின மக்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரித்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.