சென்னை: தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் நேற்று தலைமை செயலகத்தில் நடைபெற்றது. இதில் கூடுதல் தலைமைச் செயலாளர்கள் ஹன்ஸ்ராஜ் வர்மா, ஹர்மந்தர் சிங் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில் அமைச்சர் பேசியதாவது : சென்னை மாநகராட்சி சார்பில் மழைநீர் வடிகால் திட்டப்பணிகள், சாலைப் பணிகள், குளங்கள் பராமரிப்பு பணிகள், புதிதாக எடுக்கப்படும் சாலைப் பணிகள், சிறப்பு சாலைகள் உள்ளிட்ட திட்டங்களுக்கான விரிவான திட்ட அறிக்கை தயாரித்து, ஒப்பந்தப்புள்ளி கோர விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.