சென்னை: சென்னையில் தலைமைச் செயலகம் அருகே அடர் காடுகள் உருவாக்கும் திட்டம் தொடங்கியது என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் பேட்டியளித்தார். இந்த பூங்காவனது தலைமைச் செயலகத்தில் எதிர்புறம் அமைந்துள்ளது என கூறினார். 2000 நாட்டு மரக்கன்றுகள் மேல் இங்கு நடப்பட்டு நன்றாக வளர்ந்து உள்ளது என கூறினார். இதே போல் பல்வேறு இடங்களில் பூங்காக்கள் அமைக்கப்படும் என கூறினார். தற்போது வரை 32 மியாவாக்கி காடுகள் உருவாக்கப்பட்டுள்ளன என கூறினார். பல்லுயிர் பெருக்கம், மழைநீர் சேகரிப்பு, பசுமைக்கு மியாவாக்கி காடுகள் அவசியம் என கூறினார். சென்னை மாநகராட்சியின் பல்வேறு முயற்சிகளில் ஒரு முயற்சியே மியாவாக்கி காடுகள் திட்டம் என கூறினார்.