ஆலந்தூர்: விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தை சேர்ந்தவர் விக்னேஷ் (32), மாற்றுத்திறனாளி. இவர், கிண்டி ஈக்காட்டுத்தாங்கல், அச்சுத்தன் நகர், 3வது தெருவில் தங்கி, கிண்டியில் உள்ள தனியார் ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். தென்காசி மாவட்டத்தை சேர்ந்த ஆறுமுகசாமி (30), இவருக்கு உதவியாளராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் கிண்டி காவல் நிலையத்தை தொடர்புகொண்ட ஆறுமுகசாமி, ‘விக்னேஷ் வீட்டிற்கு வழக்கம்போல் வேலைக்கு சென்றபோது, அவர் இறந்து கிடக்கிறார்,’ என தெரிவித்துள்ளார். அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, விக்னேஷ் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
முதற்கட்டமாக ஆறுமுகசாமியிடம் விசாரித்தபோது, முன்னுக்குபின் முரணாக பதிலளித்துள்ளார். இதனால், அவர் மீது சந்தேகம் ஏற்பட்டது.