தமிழகத்தில் புதிதாக 469 பேருக்கு கொரோனா: 4 பேர் மரணம்

சென்னை: தமிழகத்தில் நேற்று 51,613 சோதனைகள் செய்யப்பட்டன. இதில் 469 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 8,42,730 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று மட்டும் 491 பேர் குணமடைந்து உள்ளனர். தற்போது வரை 8,26,011 பேர் குணமடைந்துள்ளனர். மருத்துவமனையில் 4,328 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் நேற்று 4 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதைச் சேர்த்து மரணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 12,391 ஆக உயர்ந்துள்ளது.

Related Stories: