சென்னை: தமிழகத்தில் கணினி குற்றங்கள் தற்போது அதிகரித்து வருகிறது. இந்த குற்றங்களை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு சார்பில் மாநிலம் முழுவதும் மாவட்டம், நகரங்கள் வாரியாக சைபர் க்ரைம் காவல் நிலையங்கள் அமைக்கப்படும் என்று அறிவித்திருந்தது. அதன்படி கடந்த ஆண்டு முதற்கட்டமாக சென்னை மாநகர காவல்துறை உள்ள 12 மாவட்டங்களில் சைபர் க்ரைம் காவல் நிலையங்கள் தொடங்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் கணினி சார்ந்த புகார்களுக்கு உடனுக்குடன் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த திட்டம் வெற்றி பெற்றதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்கள், நகரங்கள் என 46 சைபர் க்ரைம் காவல் நிலையங்கள் தொடங்கப்பட்டுள்ளது.