வேலூர்: வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டில் முதல்வரை வரவேற்க காத்திருந்த கூட்டத்தில் துப்பாக்கியுடன் நின்ற நபரால் பரபரப்பு நிலவியது. தமிழக சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதையொட்டி முதலமைச்சரும், அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி வெற்றி நடைபோடுகிறது தமிழகம் என்ற பெயரில் தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்து வருகிறார். அந்த வகையில் 5-ம் கட்டமாக இன்று காலை ராணிப்பேட்டை மாவட்டத்தில் தேர்தல் பிரசாரம் செய்தார். இதனைத் தொடர்ந்து வேலூரில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்க உள்ளார்.