சென்னை: திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி, ஆவடி மற்றும் பொன்னேரி வட்டங்களுக்கு உட்பட்ட சென்னை வெளிவட்ட சாலையின் 2ம் கட்டமாக 1,025 கோடி செலவில் நெமிலிச்சேரி முதல் பாடியநல்லூர் வழியாக திருவொற்றியூர் - பொன்னேரி - பஞ்செட்டி சாலையில் உள்ள மீஞ்சூர் வரையில் 30.50 கிலோ மீட்டர் நீளத்திற்கு அமைக்கப்பட்டுள்ளது. இந்த 6 வழித்தட பிரதான சாலையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று தலைமை செயலகத்தில் வீடியோ கான்பரன்சிங் மூலம் திறந்து வைத்தார்.