அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி: அதிமுகவில் எட்டப்பன்கள் இருக்கிறார்கள்

சென்னை: அதிமுகவில் சில எட்டப்பன்கள் இருக்கிறார்கள், அவர்கள் களையெடுக்கப்படுவார்கள் என ஜெயக்குமார் கூறினார். மீன்வளத்துைற அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:  அதிமுக கொடியை சசிகலா பயன்படுத்த கூடாது என அவர் மீது  அதிமுக சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. அதிமுக கொடியை பயன்படுத்த அவருக்கு உரிமை இல்லை. அவரும் அவரை சார்ந்தவர்களும் பயன்படுத்த கூடாது.  இது சட்ட விரோதமனது.  உச்சநீதிமன்றமே இவர்களுக்கும் கட்சிக்கும் சம்மந்தம் இல்லை என்று சொல்லி விட்டது. இவர்கள் வழக்கு போட்ட காரணத்தால்  உரிமை கொண்டாட முடியாது. கட்சியும் சரி கொடியும் சரி எந்த விதத்திலும் அவர்கள் சொந்தம் கொண்டாட முடியாது. சசிகலாவுக்கு அதிமுக கொடி கட்டிய காரை அளித்த அதிமுகவினர் எட்டப்பன்கள். அதிமுகவில் சில எட்டப்பன்கள் இருக்கிறார்கள். அவர்கள் களையெடுக்கப்படுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: