முன்விரோதம் இருவர் வெட்டி கொலை

மைசூரு: முன் விரோதம் காரணமாக மர்மநபர்கள் இரண்டு பேரை வெட்டி கொலை செய்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மைசூரு அருகேயுள்ள கவுரிசங்கர் நகரை சேர்ந்தவர்கள் கிரண் (29), கிஷன் (29) மற்றும் மது ஆகிய மூன்று பேர் ஊரை ஒட்டியுள்ள விவசாய பண்ணை வீட்டில் தங்கியிருந்தனர். அப்போது நேற்று முன்தினம் நள்ளிரவு அந்த விவசாய பண்ணை வீட்டிற்கு சென்ற மர்ம நபர்கள் அங்கிருந்த மூன்று பேரையும் அரிவாளால் சரமாரியாக தாக்கினர். இதில் கிரண் மற்றும் கிஷன் ஆகிய இருவரும் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மது பலத்த காயமடைந்தார். இதுகுறித்து தகவலறிந்து டவுன் டிசிபி பிரகாஷ் கவுடா தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். காயமடைந்த மதுவை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: