மீண்டும் தொடங்குகிறது ரஜினி நடிக்கும் 'அண்ணாத்த'படிப்பிடிப்பு!: ரசிகர்கள் ஆர்வம்..!!

சென்னை: ரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாத்த படிப்பிடிப்பு மீண்டும் இந்த மாத இறுதி அல்லது மார்ச் முதல் வாரத்தில் தொடங்கவிருக்கிறது என்று தகவல் வெளியாகியிருக்கிறது. சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாத்த படிப்பிடிப்பு, 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஹைதராபாத்தில் தொடங்கியது. ஆனால் கொரோனா ஊரடங்கால் கடந்த மார்ச் மாதம் படப்பிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்டது. மேலும் ஊரடங்கு தளர்வுக்கு பிறகு டிசம்பர் மாதம் மீண்டும் அண்ணாத்த படிப்பிடிப்பு தொடங்கியது. ஆனால் படக்குழுவில் சிலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.

மேலும் ரஜினிகாந்த்துக்கு ரத்த அழுத்தத்தில் மாறுபாடு இருந்ததால் சிகிச்சை எடுத்துக்கொண்டு சென்னை திரும்பினார். இதனால் அண்ணாத்த படிப்பிடிப்பு மீண்டும் எப்போது தொடங்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் நிலவியது. தற்போது ஓய்வில் இருக்கும் ரஜினிகாந்தை சமீபத்தில் இயக்குனர் சிவா நேரில் சென்று சந்தித்து வந்தார். இந்த நிலையில் பிப்ரவரி மாத இறுதியில் அல்லது மார்ச் முதல் வாரத்தில் அண்ணாத்த படிப்பிடிப்பு மீண்டும் தொடங்குகிறது எனவும் அதில் ரஜினிகாந்த் பங்கேற்கவிருக்கிறார் எனவும் தகவல் வெளியாகியிருக்கிறது.

அத்துடன் ஒருமாதத்தில் படப்பிடிப்பை நடத்தி முடிக்கவும் இயக்குநர் சிவா திட்டமிட்டிருக்கிறார். படப்பிடிப்புக்காக உடல்நிலையை கருதி ரஜினிகாந்த் மீண்டும் ஹைதராபாத் செல்வது சிரமம் என்று கருதிய படக்குழுவினர் சென்னையிலேயே படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது. சிவா இயக்கும் இந்த படத்தில் குஷ்பு, மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நாயகிகளாக நடிக்கின்றனர். பிரகாஷ்ராஜ், சூரி, சதீஷ் ஆகியோரும் படத்தில் உள்ளனர். இப்படத்தில் இமான் இசையமைக்கிறார்.

Related Stories: