சென்னை : மே17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், தமிழீழத்தில் நடந்த எழுச்சி பல்வேறு நம்பிக்கைக் கதவுகளை திறந்திருக்கிறது. தமிழர் எதிர்ப்பு ஊடகமான தி இந்து நாளிதழே சிறு செய்தி வெளியிடுமளவிற்கு எழுச்சியை பெற்றிருக்கிறது. மதரீதியாக தமிழரை பிரிக்க நடந்த சதி உடைந்தது. பேரணியில் இசுலாமியர், மலையகத்தமிழர் உள்ளிட்ட அனைத்து தமிழர் கோரிக்கைகளையும் ஒன்றிணைத்த போராட்டமாக பேரணி அமைந்தது.