மினி லாரி மோதி பைக்கில் சென்ற 2 பேர் பரிதாப பலி

பொன்னேரி: மீஞ்சூர் அடுத்த பெரியமுல்லைவாயல் பகுதியை சேர்ந்தவர் வேலு(45). விச்சூர் காந்தி நகரை சேர்ந்தவர் செந்தில்(36). இருவரும் நேற்று பைக்கில் மீஞ்சூரில் இருந்து செங்குன்றம் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

பெரியமுல்லைவாயல் பாலம் அருகே சென்றபோது எதிரே வந்த மினி லாரி பைக் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே இருவரும் பரிதாபமாக இறந்தனர். தகவலறிந்த மீஞ்சூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்தவர்களின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் புகாரின்பேரில் லாரி டிரைவர் சரவணகுமாரை கைது செய்து விசாரிக்கின்றனர்.

Related Stories: