பங்காரு அடிகளாரிடம் மத்திய அமைச்சர் ஆசி

சென்னை: மேல்மருவத்தூர் சித்தர் பீடத்திற்கு நேற்று மதியம் 12.30 மணிக்கு மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை மற்றும் கனரக தொழில்கள் மற்றும் பொது நிறுவனங்கள் அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் வருகை தந்தார். அவருக்கு, சித்தர் பீடத்தில் பூரண கும்ப மரியாதையுடன் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர், கருவறைக்கு சென்று ஆதிபராசக்தி அன்னைக்கு குங்குமம் அர்ச்சனை செய்து வழிபட்டார். பிறகு புற்றுமண்டபம் சென்று வணங்கிவிட்டு சப்தகன்னியர் சந்நிதியில் வணங்கிய பின்  நாகபீடத்தில் விளக்கு ஏற்றிவழிப்பட்டார்.

இதையடுத்து, அருட்கூடத்தில் ஆன்மிக குரு பங்காரு அடிகளாரை சந்தித்து ஆசி பெற்றார். தியான மண்டபத்தில் தியானம் செய்தார். அதன்பின் ஆதிபராசக்தி மருத்துவமனைக்கு சென்று பார்வையிட்டார். ஆதிபராசக்தி மருத்துவமனை நிர்வாக இயக்குநர் த.ரமேஷ் உடனிருந்தார்.

Related Stories: