சென்னை: காஞ்சிபுரம் பிரபல ரவுடி ஸ்ரீதரின் மகள் மீதான சட்டவிரோத பண பரிமாற்ற தடைச் சட்ட வழக்கை ரத்து செய்ய சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது. காஞ்சிபுரத்தை சேர்ந்த பிரபல ரவுடி ஸ்ரீதர் மீது கொலை, கொலை முயற்சி என 26 வழக்குகள் உள்ளன. இந்த வழக்குகளில் இருந்து தப்பிக்க ஐக்கிய அரேபிய அமீரகத்துக்கு சென்ற ஸ்ரீதர் 2017ம் ஆண்டு மரணமடைந்தார். முன்னதாக குற்றச்செயல்கள் மூலம் பல கோடி ரூபாய் மதிப்பில் சொத்துக்களை வாங்கி குவித்ததாக ஸ்ரீதர், அவரது மனைவி, மகள் உள்ளிட்டோருக்கு எதிராக அமலாக்கப்பிரிவு சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி ஸ்ரீதரின் மகள் தனலட்சுமி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.