சென்னை: சமத்துவ மக்கள் கழக நிறுவன தலைவர் எர்ணாவூர் நாராயணன் விடுத்துள்ள அறிக்கை: சமத்துவ மக்கள் கழக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் தண்டையார்பேட்டை மணிக்கூண்டு அருகே உள்ள வாணி மஹால் திருமண மண்டபத்தில் நாளை காலை 10 மணிக்கு எனது தலைமையில் நடைபெற உள்ளது. இதில், வருகிற சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்வது குறித்தும், கழக வளர்ச்சி பணிகள், உறுப்பினர் சேர்க்கை உள்ளிட்ட பல்வேறு கருத்துக்கள் குறித்தும் ஆலோசிக்க உள்ளோம்.