சிவகங்கை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன், சிவகங்கையில் நிருபர்களிடம் கூறியதாவது: நாட்டின் எல்லை பகுதியை போல தடையை ஏற்படுத்தி, எம்பிக்கள் கூட விவசாயிகளை சந்திக்க விடாமல் செய்யும் மத்திய அரசின் செயல் கண்டனத்திற்குரியது. இது சர்வாதிகார செயல். பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரின் விடுதலையில் நயவஞ்சக போக்கோடு மத்திய அரசு செயல்படுகிறது. மாநில அரசு தப்பிக்க நினைக்காமல் 7 பேரையும் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். தேர்தலை கண்டு அதிமுக அஞ்சுகிறது. உள்ளாட்சி அமைப்பின் பொறுப்பில் உள்ள அதிகாரிகளின் பதவிக்காலத்தை தொடர்ந்து நீட்டித்து உள்ளாட்சி தேர்தலைக்கூட சரிவர நடத்தாமல் இந்த அரசு செயல்பட்டு வருகிறது.