உழவர் உற்பத்தியாளர் கூட்டம்

மதுராந்தகம்: உழவர் உற்பத்தியாளர் குழு நிர்வாகிகள் மற்றும் வேளாண் இயந்திரங்கள் விற்பனையாளர் கூட்டம் மதுராந்தகம் ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையத்தில் நேற்று நடந்தது. கலெக்டர் ஜான்லூயிஸ் கலந்து கொண்டார். மதுராந்தக ஆர்டிஓ லட்சுமிபிரியா, வேளாண் இணை இயக்குனர் சம்பத்குமார், துணை இயக்குனர்கள் சாந்தி சுவாமிநாதன், ரவீந்திரா, தோட்டக்கலை துணை இயக்குனர் சாந்தாசெலின்மேரி உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் 2020-21ம் ஆண்டுக்கான கூட்டு பண்ணை திட்டத்தின் கீழ் வேளாண் துறை மற்றும் தோட்டக்கலை துறை மூலம் தொடங்கப்பட்டுள்ள 32 உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு அரசு நிதி, 1.60 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிதியின் மூலம் அக்குழுவினர், வேளாண்மைக்கு பயனுள்ளதாக அமையும் கருவிகளை விற்பனை செய்யும் பிரதிநிதிகளிடம் நேரடியாக பேசி வாங்கி கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டன. இதற்காக, பல தனியார் நிறுவனங்கள், தங்களது வேளாண்மை கருவிகளை காட்சிப்படுத்தினர்.

Related Stories: