சென்னை: தமிழக அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 59-லிருந்து 60-ஆக உயர்த்த அரசு திட்டமிட்டுள்ளது. அரசு ஊழியர்களுக்கான ஓய்வு பெறும் வயது குறித்து நாளை அறிவிப்பு வெளியாக வாய்ப்பு உள்ளது. இதற்க்கு முன்பாக அரசு ஊழியர்களின் ஓய்வு வயது 58-ல் இருந்து 59-ஆக கடந்த மே மாதம் 14-ம் தேதி உயர்த்தப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டது. காரணம் அப்போது கொரோனா தடுப்பு பணிகளுக்கான செலவை கணக்கிட்டு செலவை குறைப்பதற்கான நடவடிக்கையாகவும், ஏனெனில் ஓய்வு பெறுபவர்களுக்கு படி பலன்கள் போன்றவற்றை வழங்கும் போது நிதி பற்றாக்குறையின் காரணமாக ஓய்வு பெறக்கூடியவர்களுக்கு வழங்க முடியாத ஒரு சுழலானது அரசுக்கு ஏற்படக்கூடிய நெருக்கடியின் காரணமாகவே, கடந்த ஆண்டு மே7-ம் தேதி வெளியிடப்பட்டு அதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டது.