பாடாலூர்: ஆலத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பெண் சத்துணவு அமைப்பாளர் தீக்குளிக்கப்போவதாக கூறி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் ஒன்றியம் இரூர் அரசு பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக பணியாற்றி வருபவர் சவீதா (38). இவர், அரியலூரில் உள்ள சத்துணவு அமைப்பாளர் கடன் வழங்கும் சங்கத்தில் விண்ணப்பம் பெற்று ஆலத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கடன் வேண்டி விண்ணப்பம் அளித்துள்ளார். இந்த விண்ணப்பத்தை சரிபார்த்து தேவையான ஆவணங்கள் தயாரித்து அரியலூரில் உள்ள கடன் வழங்கும் சங்கத்திற்கு அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.