சென்னை: வரும் 8-ம் தேதி முதல் சென்னை உயர்நீதிமன்றத்தில் நேரடியாக விசாரணை மேற்கொள்வது என முடிவெடுக்கப்பட்டுள்ளது என கூறப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி சென்னை உயர்நீதிமன்றம், அதன் மதுரை கிளையில் நேரடி விசாரணை நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது கூறப்படுகிறது. நிர்வாகக் குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டதாக தலைமைப் பதிவாளர் குமரப்பன் அறிவிப்பு வெளியிட்டார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பொது முடக்கம் அறிவிக்கப்பட்டதால், மார்ச் இறுதி வாரத்தில் இருந்து, கடந்த 11 மாதங்களாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் நேரடி விசாரணைக்கு தடை விதிக்கப்பட்டது.