சென்னை: கொரேனாவில் இருந்து உணவுத்துறை அமைச்சர் காமராஜ் குணமடைந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. கடந்த ஜனவரி 5-ம் தேதி கொரோனா பாதிப்பால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஒரு மாதம் தொடர் சிகிச்சையில் இருந்த அமைச்சரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அமைச்சர் காமராஜ் இன்று வீடு திரும்புவார் எனவும் மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. கடந்த 5-ம் தேதி அமைச்சர் காமராஜ் கொரோனா தொற்று காரணமாக சென்னை ராமாபுரத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சென்னை மணப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.