சென்னை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த நாட்களுக்கு வறண்ட வானிலையே நீடிக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்; தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த 5 நாட்களுக்கு வறண்ட வானிலையே நீடிக்கும். சென்னை உள்பட வட தமிழகத்தில் காலையில் மேகமூட்டமும், பனிமூட்டத்துடன் கூடிய வறண்ட வானிலை நிலவும். சென்னையில் காலை நேரங்களில் லேசான பனி மூட்டம் காணப்படும். அடுத்த 2 நாட்களுக்கு மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதியில் பலத்த காற்று வீசக்கூடும்.