சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு குறுக்கு ரோடு பகுதியில், தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் விதமாக அமைந்துள்ள 25 கண்மாய் பாலம் சுமார் நூற்றாண்டுகளை கடந்து விட்ட பாலமாகும். தற்போது பாலத்தின் பக்கவாட்டு சுவர் சேதமடைந்து வருகிறது. மேலும் வீராணம் ஏரியில் இருந்து பாசனத்திற்காக திறந்து விடப்படும் தண்ணீர் 25 கண்மாய் வழியாக திறந்துவிடவும், உபரி நீரை வெளியேற்றவும், போக்குவரத்துக்காகவும் பாலம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் பாலம் மிக குறுகலானதாக உள்ளதால், பேருந்துகள் வழிவிட்டு ஒதுங்க முடியாமல் பாலத்தின் மைய பகுதியில் சிக்கி கொள்வதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.