சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் அறிக்கை: முன்னாள் தலைமை நீதிபதி வீராசாமியின் மருமகனும், தமிழக அரசின் முன்னாள் தலைமை வழக்கறிஞருமான அழகிரிசாமி திடீரென மறைந்துவிட்டார் என்ற துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனைக்கு உள்ளானேன். அவரது மறைவிற்கு திமுக சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அழகிரிசாமி கலைஞருக்கு மிகவும் நெருக்கமானவர். இவரது மாமனார் வீராசாமி, நெருக்கடி நிலை அமலில் இருந்த நேரத்தில், சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக- ஜனநாயகத்தின் பக்கம் உறுதியாக நின்றவர்.