சென்னை: யானைகளை கொண்டு செல்ல குஷன் உள்ளிட்ட சிறப்பு வசதி கொண்ட லாரிகளை கொள்முதல் செய்ய உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. யானைகள் நல ஆர்வலர் முரளிதரன் வழக்கில் தலைமை வனப்பாதுகாவலருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வனப்பகுதிகள், விலங்குகள் வழித்தடங்கள் ஆக்கிரமிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும் கூறியுள்ளது.