ஆவடி: ஆவடி அடுத்த திருமுல்லைவாயல், சரஸ்வதி நகர், 7வது தெருவை சேர்ந்தவர் பாண்டியம்மா (52). இவரது பேத்தி சீதா (17). (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இவர், அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வருகிறாள். இவள், பாண்டியம்மா பராமரிப்பில் வளர்ந்து வருகிறாள். இந்நிலையில் கடந்த 21ம் தேதி இரவு சீதா வீட்டிலிருந்து வெளியே சென்றவள் வீடு திரும்பவில்லை. இதனையடுத்து, அவளை பாண்டியம்மா மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடினர். இருந்த போதிலும் அவளை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. இது குறித்து பாண்டியம்மா திருமுல்லைவாயல் போலீசில் புகார் செய்தார். பின்னர், போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடினர். இதற்கிடையில், பாண்டியம்மா பேத்தி சீதாவை கண்டுபிடித்து தருமாறு உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, மாணவி சீதாவை கண்டுபிடித்து தர காவல்துறைக்கு உத்தரவிட்டனர்.