தைப்பூசத்தில் பணி ஊழியருக்கு ‘சி-ஆப்’ எம்டிசி அறிவிப்பு

சென்னை: தைப்பூசத் திருநாள் அன்று பணியாற்றியவர்களுக்கு மற்றொரு நாளில் ‘சி-ஆப்’ வழங்குவதாக எம்டிசி நிர்வாகம் தெரிவித்துள்ளது.  இதுகுறித்து மாநகர் போக்குவரத்துக்கழகம், அனைத்து கிளை மேலாளர்களுக்கும் அனுப்பியுள்ள கடிதத்தில், ‘தைப்பூசத் திருவிழாவினை முன்னிட்டு அரசு அறிவிப்பின்படி 28.1.21 அன்று ஒருநாள் மட்டும் செலாவணி முறிச்சட்டம் 1881ன் கீழ் ெபாது விடுமுறை அளிக்கப்படுகிறது. எனவே 28ம் தேதி ஷிப்டில் பணிபுரிந்த அனைத்து பிரிவை சேர்ந்த பணியாளர்களுக்கு ஈடு செய்யும் விடுப்பு (சி-ஆப்) கூடுதலாக வழங்கப்படும்’ எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: